புதன், 30 ஜனவரி, 2013

நிப்ட் ( NIFT ) விண்ணப்பிக்கும் நேரம் இது.


நிப்ட் ( NIFT ) விண்ணப்பிக்கும் நேரம் இது.



1986ம் ஆண்டு, நிப்ட் மையம் டெல்லியில் மட்டுமே  இருந்தது. ஆனால், இன்று  அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டோரல் படிப்புகள் வரை இவர்கள் வழங்குகிறார்கள்.

நிப்ட் மையங்கள்  பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய படிப்புகளைத் தாண்டி, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை பேஷன் படிப்புடன், துணைப் பாடங்களாக வழங்கப்படுகின்றன.

மேலும்  அவை கீழ்காணும் பட்டங்களை வழங்குகின்றன.

பேச்சுலர் ஆப் டிசைன்(B Des.)
இது 4 வருட படிப்பாகும். இதில், பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன் மற்றும் பேஷன் கம்யூனிகேஷன் போன்ற அம்சங்கள் அடங்கும்.

பேச்சுலர் இன் பேஷன் டெக்னாலஜி(B.F.Tech)
அப்பாரல் ப்ரொடக்ஷன். இது 4 வருட படிப்பாகும்.

மாஸ்டர் ஆப் டிசைன்(M.Des) - டிசைன் ஸ்பேஸ்

எம்.எப்.,டெக் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் டெக்னாலஜி

எம்.எப்.எம் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் மேனேஜ்மென்ட்.

எப்போது? எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

இந்த 2013ம் ஆண்டில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்போது பொதுப் பிரிவுக்கு ரூ.1,100ம், SC/ST/PHP பிரிவுக்கு ரூ.550ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

படிப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்ட Prospectus -ஐ, டவுன்லோடு செய்யwww.applyadmission.net/nift2013/Prospectus2013.pdf. இங்கு கிளிக்கவும். 

நுழைவுத்தேர்வு எப்படி இருக்கும் ?

இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள், ரெண்டு பிரிவுகளில், பேப்பர் வழியிலான தேர்வுகளை எழுத வேண்டும். General Ability தேர்வானது(GAT), Quantitative ability, Communication ability, English comprehension, Analytical ability, General knowledge and Current affairs போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.

Creative Ability தேர்வானது(CAT), உங்களின் படைப்பாக்க மற்றும் புத்தாக்க திறன்களை சோதிக்கிறது. 

மேற்கூறிய 2 தேர்வுகளில், செயல்பாடு கணக்கிடப்பட்டு, 6,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள், Material handling test என்ற ஒரு தேர்வில் பங்குகொள்ள வேண்டும். இந்த தேர்வில், மாணவர்களுக்கு மெட்டீரியல்கள் வழங்கப்படும். அதை வைத்து, கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற மாடலை அவர்கள் உருவாக்க வேண்டும்.

இளநிலை மற்றும் முதுநிலைகளில், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு நடத்தப்படும் GAT தேர்வானது, கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. இது கேஸ் ஸடடி ஆகும் ஆனால் கிரியேடிவ் டெஸ்ட் அல்ல. அனைத்து முதுநிலைப் படிப்புகளிலும் சேர, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை கடக்க வேண்டும். இவற்றுக்கு 30% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் உண்டு.

மேலும் விரிவான விவரங்களுக்கு கீழ்காணும் வலைமுகவறியைப் பார்க்கவும்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

மணம் பரப்பும் மகரந்தப் பூக்கள்




மகரந்தப்பூக்கள் என்ற இந்த புத்தகம் என்னுடைய நண்பர் திரு கதிர்வேல் எழுதிய தேனினும் சுவை மிக்க ஒரு புத்தகம்.இந்த மகரந்தப் பூக்கள் மணம் பரப்ப வாழ்த்துரை வழங்கி வெளியிட்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.நாமும் படித்து வாழ்த்துவோம் நண்பர்களே.

திங்கள், 28 ஜனவரி, 2013

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!


திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

2
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை  உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான
திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 
 
                         
 இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 

 
        
 தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.       
                      

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள   frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
 

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும்  Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த  frontal cortex  சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!  
 

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 
 

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது. 
 
        

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
 
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
 
நன்றி :புதிய உலகம் 
You might al





இன்று காலை இந்த பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன்.பாடலின் வரிகள் மிகவும் நன்றாக இருந்ததால் உங்களுக்காக் அந்த அர்த்தமுள்ள வரிகள்....


தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே

நாளை நம் கையில்...




நாளை நம் கையில்...

நிலத்தில் பயிரிட நிலத்தைப் பண்படுத்த வேண்டும். அதுபோல, நம்பிக்கையை வளர்ப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.

பொன்மொழிகளையும், போதனைகளையும் மனதில் விதைத்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.

ஒரு விவசாயி பயிரிடும் முன் என்ன செய்கிறார்? முதலில் நிலத்தில் இருக்கும் கற்களையும், குச்சிகளையும் பொறுக்கி எடுத்து மண்ணைப் பக்குவப்படுத்தி தரையை சமப்படுத்துகிறார், உழுகிறார், உரமிடுகிறார், நீர் பாய்ச்சுகிறார், அதன்பின்னரே நல்ல விதையை ஊன்றுகிறார்.

நம் வாழ்க்கையிலும், நாம் அத்தகைய தயாரிப்பைச் செய்ய வேண்டும். அறநூல்கள், ஞானிகள், முனிவர்களிடமிருந்து கற்ற கருத்துக்கள் விதைகளாக உள்ளன. அவற்றை விதைத்து வளருங்கள்.

அதை வளர்ப்பது எளிதன்று. முயற்சி தேவை. முயன்றால் முடியும். சிறிய செயல்களைச் செய்வதற்குக் கூட கடினமான உழைப்பு தேவையாக இருக்கிறது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் நிறைவேறும்.

உங்கள் உள்ளத்தில், நம்பிக்கையை வளர்க்க நீங்கள் முயலும்போது, நூற்றுக்கணக்கான தடைகள் குறுக்கிடும். சோதனைகள் வரும், பல சந்தேகங்கள் எழும். சாதாரண வாழ்வியல் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கே நிறைய பாடுபட வேண்டும் என்றால், உயர்ந்த லட்சியத்தை நிறைவேற்ற கடுமையான பாடுபட வேண்டியிருக்கும். ஏனெனில், லட்சியத்திற்கு தேவை நம்பிக்கை.

நீங்கள் ஒரு திட்டத்தைத் துவங்கி நடத்தும் போதும், ""இது வெற்றி பெறுமா? யோசித்தாயா?'' என்றெல்லாம் பேசி, நம்பிக்கையை குலைப்பவர்களும் உண்டு.
செயல்களில் கவனம் செலுத்தும் போது, அவற்றில் இருந்து திசை திருப்பும் வகையில், பல கவர்ச்சிகள் நம்மை ஈர்க்கின்றன. இவற்றில் இருந்து வெளி வர வேண்டும்.

நம்பிக்கை உடையவர்களே! நாளைய உலகம் உங்கள் கையிலேயே சுழன்று கொண்டிருக்கிறது.

மெகா சீரியல்கள்



-

--------------------------
S.Ve.சேகர், B.R.சோப்ரா, Y.G.மகேந்திரன், நாகா போன்றோரை எண்ணி ஏங்க வைத்துவிட்டார்கள் இன்றைய சின்னத்திரை நாடக இயக்குனர்கள்.

தற்காலங்களில் வரும் நாடகங்களில் சினிமா இறுதி கட்ட காட்சி பார்ப்பது போல இரைச்சல் பின்னிசை, பளீர் பளீர் என்று ஒளி வீச்சு, அதிர்வு நிலையில் டி.வி. யை வைத்தது போல கிடி கிடு என நடுக்கம். அதாவது, நிலைமையின் தீவிரத்தை காட்டுகிறார்களாம். படபடப்பு, ஆக்ரோஷம், கடுமையான சொல்லாடல் போன்றவை தான் இன்றைய நாடகங்கள் கற்று கொடுக்கின்றன. மலேசியா உட்பட பல்வேறு இடங்களில் தமிழ் மக்களே இது போன்ற நாடகங்களுக்கு தடை கோரி போராடியுள்ளது வெளியே தெரியாத ஒன்று. எப்போது நாடகத்தை பார்த்தாலும் ஒன்று மிக பெரிய இழப்பை சந்தித்தது போன்ற சோக இசை இல்லை, மிக கொடூரமான இறுதிகட்ட காட்சி போன்ற இசை. இப்படி தினம் தினம் பெண்கள் மத்தியில் இதுபோன்ற நாடகங்களை போடுவதால் அவர்களை உணர்ச்சி பிழம்பாக மாற்றி வைத்துள்ளனர். சிறு விசயங்களுக்கு கூட அதீத உணர்ச்சிபூர்வமான ரியாக்சன் வருகிறது.

இதுவே 90 களில் வந்த நாடங்களில் ஒரு சலனமற்ற, நிதானமான, அதேசமயம் விறுவிறுப்பு, நகைச்சுவை கொண்ட கதைகளத்தோடு நாடகத்தை நகர்த்துவார்கள். பார்ப்பவர்களுக்கு ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நாவல் படிப்பது போல இருக்கும். S.Ve.சேகர், கிரேசி மோகன், Y.G.மகேந்திரன் போன்றோரின் நகைச்சுவை, குடும்ப நாடகங்கள் பார்க்கும் போது வீட்டில் வசந்தம் வீசும். நாகா இயக்கிய மர்ம தொடரில் கூட விறுவிறுப்பும், நிதானமான பொழுதுபோக்கும் இருக்கும். B.R.சோப்ரா போன்றோரின் ராமாயணம், மகாபாரதம் போன்ற பக்தி-இதிகாச நாடகங்கள் இன்றும் மறக்க இயலாது. திகில் நாடகமான நிஷா காந்தி கூட இதே வகைதான்.

சுருக்கமாக அன்றைய நாடகங்கள் பார்க்கும்போது தியானம் செய்தது போன்ற திருப்தியும் நிறைவும் கிடைத்தது. இன்றைய நாடகங்களில் இருந்து வீட்டு பெண்களையும் குழந்தைகளையும் எப்படி காத்து மீட்பது என்று தெரியவில்லை..

மெல்லக் கொல்லும் "மின்குப்பை'..


மெல்லக் கொல்லும் "மின்குப்பை'...

இந்தியாவில், உணவுக் கழிவுகள், சந்தைக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாலிதீன் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள் போன்றவற்றின் மூலம், சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் மட்டும், வருடத்துக்கு 5 கோடி டன் குப்பை சேர்கிறது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், இந்தக் குப்பைகளை வெளியேற்றுவதற்கு, சரியான வழிமுறைகளை உருவாக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், இதுவரைக்கும், இந்தியாவில், எந்த மாநிலமும், திருப்திகரமான ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை.

இந்த நிலைமையில், குப்பை என்று நமக்குத் தோன்றாமலேயே, ஒரு பிரம்மாண்டமான குப்பை, இந்தியாவில் உருவாகிவருகிறது. அதுதான் எலெக்ட்ரானிக் குப்பை. அதாவது மின்குப்பை.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எலெக்ட்ரானிக் கருவிகளின் வருகையால், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் மக்களை அச்சுறுத்துகின்ற புதிய குப்பை இது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் வருடத்துக்கு ஒன்றரை லட்சம் டன் மின்குப்பைதான் சேர்ந்தது. இது வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே வந்து, இந்த ஆண்டு முடிவில் சுமார் 8 லட்சம் டன் மின்குப்பை சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மட்டும், ஒரு வருடத்தில், சுமார் 40 ஆயிரம் டன் மின்குப்பை சேர்கிறது. இந்தியாவில், மின்குப்பையை உருவாக்குவதில், மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.

வீட்டில் நாம் பயன்படுத்தும் டி.வி. பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மெஷின், கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன், மிக்ஸி, மைக்ரோ-ஓவன், ஏர்-கண்டிஷனர், ஸ்டீரியோ, டி.வி.டி. மியூசிக் பிளேயர், கேமரா தொடங்கி, கையில் கட்டப்படும் டிஜிட்டல் கடிகாரம், சுவரில் மாட்டப்படும் பேட்டரி சுவர் கடிகாரம் வரை எல்லாமே அவற்றின் பயன்பாடு முடிந்ததும் மின்குப்பையாகின்றன. இவற்றைக் குப்பையில் போட்டால் மக்குவதில்லை. எரித்தால் நச்சு வாயுவை வெளிப்படுத்தும். ஆகவே இவற்றை மறுசுழற்சி செய்வதே நல்லது.

ஆனால் இந்தியாவில் உருவாகும் மின்குப்பையில் சுமார் 5 சதவீதம் மட்டுமே முறையான மறுசுழற்சிக்குச் செல்கிறது. மீதி எல்லாமே இதர குப்பைகளுடன் சேர்ந்து மண்ணுக்குச் செல்கிறது அல்லது எரிக்கப்படுகிறது. இதில்தான் ஆபத்து உருவாகிறது என்று எச்சரித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை.

எலெக்ட்ரானிக் கருவிகளைத் தயாரிப்பதற்கு உதவுகின்ற உதிரி பாகங்களில், கடுமையான நச்சுத்தன்மை உள்ள வேதிப்பொருள்கள் குறைந்தது ஆயிரம் இருக்கும். இக்கருவிகளை முறைப்படி அழிக்காவிட்டால் இவற்றில் உள்ள நச்சுகள் காற்றில் கலந்தும், மண்ணில் கலந்தும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த நச்சுகள் கலந்த காற்றை, மனிதன் சுவாசிக்கும்போது, உடல் நலன் கெடும்; மண்ணில் கலக்கும்போது மண்ணும் நஞ்சாகி, நிலத்தடி நீரும் நஞ்சாகி விடுவதால் தாவரங்கள் அழியும், விவசாயம் பாதிக்கப்படும். இந்த நச்சுள்ள தாவரங்களை உண்ணும் விலங்குகளும் மடியும்.

உதாரணமாக, உலகம் முழுவதிலும் உற்பத்திசெய்யப்படும் பாதரசத்தில், சுமார் 25 சதவீதம், எலெக்ட்ரானிக் கருவிகளின் தயாரிப்புக்காகப் பயன்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டி.வி. பிக்சர் டியூபுகள், ஒளி தரும் விளக்குகள், செல்போன்கள், சென்சார்கள், தெர்மோஸ்டேட் எனப்படும் வெப்பக்கட்டுப்பாட்டு மின்கருவிகள், பேட்டரிகள் போன்றவற்றில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கருவிகள், மண்ணில் புதைக்கப்படும்போது, பாதரசம், நிலத்தடி நீரில் கலந்து கிணற்றுநீர் மூலம் குடிநீராக வீட்டுக்கு வந்துசேரும். இதை மனிதர்கள் குடிக்க நேர்ந்தால் பாதரசம் மனித ரத்தத்தில் சிறுகச் சிறுகச் சேரும்; சில வருடங்களில், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

அடுத்ததாக காரீயம். இது கம்ப்யூட்டர் சர்க்யூட் போர்டிலும் பிரிண்டரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிப்பதுடன் சிறுநீரகம் மற்றும் இனப் பெருக்க உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. இதன் விளைவால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும். தந்தை ஆக முடியாது. அப்படியே குழந்தை பிறந்தாலும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருக்கும் வலிப்புநோய்கள் ரத்தநோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

கம்ப்யூட்டர் டிஸ்குகளிலும், டேட்டா டேப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்ற "குரோமியம் 6' எனும் வேதிப்பொருள், மரபுப் பண்புகளை நிர்ணயிக்கின்ற டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக, பிறவி ஊனமுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

கம்ப்யூட்டர் மதர்-போர்டுகள், டோனர், பிரிண்டர் முதலியவற்றில் இருக்கும் பெரிலியம், நுரையீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. பேரியம், இதயத்தையும், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளையும் மெல்ல மெல்ல சேதமடையச் செய்யும். புற ஊதாக் கதிர்வீச்சு உள்ள கருவிகளில் காட்மியம் பயன்படுத்தப்படுகிறது. இது, தொடக்கத்தில், தலைவலி, தசைவலியை உண்டாக்கும். பின்பு, சிறுநீரகத்தைப் பாதித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஒரு கம்ப்யூட்டரைத் தயாரிக்க சுமார் 7 கிலோ பிளாஸ்டிக் பயன்படுகிறது. பிளாஸ்டிக், மனித குலத்தின் எதிரி என்பது எல்லோருக்கும் தெரியும். இதை எரிக்கும்போது டயாக்சின் எனும் நச்சு வாயு வெளியேறுகிறது. இதை சுவாசித்தால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் தீவிரமடைந்துவிடும்.

அடுத்ததாக, இதையும் சொல்லியாக வேண்டும்.

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் கோலோச்சும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், தங்களிடம் பழுதான நிலையில் உள்ள அல்லது காலாவதியான மின்சாதனப் பொருள்களையும் மென்சாதனப் பொருள்களையும் மொத்தமாக ஏலத்தில் விற்றுவிடுகின்றன.

இவற்றை வாங்கும் சிறு வியாபாரிகள் இந்த மின்சாதனங்களில் உள்ள உதிரி பாகங்களை சந்தைக்குக் கொண்டுவந்து, குறைந்த விலையில் விற்கின்றனர். சில்லரை வியாபாரிகள் இந்த உதிரி பாகங்களை வாங்கி, குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கின்றனர். பழுதான, பாதுகாப்பில்லாத இந்த மின் மற்றும் மென்சாதன பாகங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தையின் உடல்நலனைக் கெடுத்துவிடும் ஆபத்து நிறைந்தது.

மின்குப்பையால், இத்தனைப் பிரச்னைகள் ஏற்படுவதை, இந்திய மக்கள் இன்னமும் முழுவதுமாக உணரவில்லை என்பதுதான் சோகம். மின்குப்பை உற்பத்தியில், இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்திலும், இதே நிலைமைதான். தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், தொலைக்காட்சி ஊடகங்கள், அரசியல் சாரா இயக்கங்கள் எல்லாமே, இந்தப் பிரச்னையில் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை என்பதும் கவலைக்குரிய விஷயம்.

தமிழக அரசு, 2010-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து மின்குப்பை கொள்கையை ஏற்படுத்தியது. இது, 1989-இல், ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட, இடர் தரும் திடக்கழிவு மேலாண்மைச் சட்டத்தின் மறுவடிவமாகவே, இருந்தது. தமிழக மக்களிடம், மின்குப்பை குறித்து, போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது, இந்தத் திட்ட அம்சங்களில் ஒன்று. என்றாலும், பொதுமக்களிடம், இவையெல்லாம், பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

ஆனால், மனித இனத்தை, மெல்ல மெல்லக் கொல்லும், மின்குப்பையின் ஆபத்து குறித்து, மேல் நாட்டினர் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற பெரிய நாடுகள் மட்டுமன்றி, செüதி அரேபியா, மலேசியா போன்ற சிறு நாடுகள்கூட அங்கு உருவாகும் மின்குப்பையை அவர்கள் நாட்டில் அழிப்பதில்லை.

அப்படிச் செய்தால் அவர்கள் நாட்டின் சுற்றுச்சூழல் கெட்டுவிடும் என்று அஞ்சி சீனாவுக்கும், இந்தியாவுக்கும் மறுசுழற்சிக்காக, அனுப்பிவிடுகின்றன. இங்குதான், அவை குறைந்த செலவில், மறுசுழற்சி செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. வெளிநாடுகளிலிருந்து வரும் மின்குப்பை முழுவதையும், முறைப்படி உரிமம் பெற்று, மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள், இந்தியாவில் மிகக் குறைவு. பணத்துக்கு ஆசைப்பட்டு, தகுந்த உரிமம் பெறாத, போலி நிறுவனங்கள்தான் மறுசுழற்சி செய்கின்றன.

அப்படிச் செய்யும்போது, அதன் நச்சுகளால், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, இந்த நிறுவனங்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதனால், காற்று மாசடைந்து, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பலியாகிறார்கள்.

நகரங்களில், மின்குப்பையைத் தரம் பிரித்துச் சேகரிப்பதற்குத் தனியார் முகமைகளை நியமிக்கும்போது அவை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும். இதில் தவறு ஏற்படும்போது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளத் தயங்கக் கூடாது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மின்குப்பைகளை மக்கள் எரிப்பதையும் புதைப்பதையும் தடுக்க சரியான திட்டங்களும் சட்ட வழிகாட்டுதல்களும் தேவை. அதேநேரத்தில், மின்குப்பையை தாராளமாக மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கும் அதை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு, அரசு மானியம் தருவது உள்ளிட்ட சலுகைகளை அளித்து அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

இந்தப் பிரச்னையில், அரசு இயந்திரம் பழுதின்றி செயல்படும்போது, பொதுமக்களும், அரசின் ஆக்கப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். உபயோகித்து முடித்த செல்போனையோ, டி.வி.யையோ, கம்ப்யூட்டரையோ, பேட்டரிகளையோ, தெருக்குப்பையில் எறிந்துவிடக்கூடாது. பதிலாக, மக்காத குப்பை என்று தரம் பிரித்து, குப்பைகளைச் சுத்தப்படுத்தும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

எந்த ஒரு எலெக்ட்ரானிக் கருவி என்றாலும், அது பயன்பாட்டில் இல்லை என்றால், திரும்பவும் அதன் தயாரிப்பாளரிடமே குறைந்த விலைக்குக் கொடுத்துவிடலாம்.

தமிழக அரசு, சென்னையில் மட்டும், 21 மின்குப்பை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு உரிமம் தந்துள்ளது. அவற்றுக்கு நம் மின்குப்பைகளைத் தந்துவிடலாம்.

நல்ல பயன்பாட்டில் உள்ள, கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன் போன்றவற்றைத் தரம் உயர்த்துவதற்கு வேண்டுமானால் மாற்றலாம். மாறாக, அழகுக்காகவும், புதிய வடிவத்துக்காகவும், இவற்றை அடிக்கடி மாற்றும் பழக்கத்தைத் தவிர்த்தால், மின்குப்பை சேர்வதைக் குறைக்கலாம்.

இவ்வாறு, நாம் ஒவ்வொருவரும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால்தான், மின்குப்பையால் ஏற்படும் அழிவையும், ஆபத்தையும் ஓரளவுக்காவது தடுக்க முடியும்.

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு:


மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு:
##############################


மத்திய அரசுத் துறைகளில் உதவியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, நடப்பாண்டு Staff Selection Commission தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன.

விண்ணப்பங்களை ஆன் லைன் மூலமாகவும் பூர்த்தி செய்து அனுப்பவும், மேலதிக விவரங்களை பெறவும்,www.ssconline.nic.in என்ற இணைய முகவரியை அணுகலாம்.

புதன், 23 ஜனவரி, 2013

வெற்றிக் கொடி கட்டு







மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும் இருக்கலாம். இது சூழ்நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகுவதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இருக்கும்.

இத்தனை நாளும் நாம் மற்றவருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து, நம்பிக்கையுடன் அடுத்தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழகலாம் என்பதை மனதில் கொண்டு, அனைவரிடமும் நம்மால் பழக முடியும் என்பதற்கு இதோ இங்கே சில வழிகள்:

1. புது முயற்சி:

எப்பொழுதும் தொடர்ச்சியாக செய்யும் வேலைகளில் இருந்து, மனதை மாற்றி, வேறு ஏதாவது புது வேலை செய்யவும். ஒரு பழக்கத்தை திடீரென்று மாற்றுவது கடினமாக இருப்பினும், அது நல்ல பலனைத் தரும்.

எப்படியெனில் ஒரு புதிய திசையில் நம்மை மாற்றிக் கொள்வதும், பல இட மாற்றமும் மனதிற்கு பெரும் நம்பிக்கையை கொடுக்கும்

2. விருப்பு வெறுப்புகளுக்கு இடர் வராமல் பார்த்துக் கொள்வது:
நாம் அடுத்தவருடன் பழக வேண்டுமெனில், அவர்களது பார்வை நம் மேல் படும்படி, நாம் நம்பிக்கையுடன் செயல்படுவது தான் முதற்படி. உதாரணமாக, ஒரு கிளப்பில்(club) கலந்து கொள்வது அல்லது குழுவில் சேர்வது, விளையாட்டில் ஈடுபடுவது போன்றவை செய்வதால் பிரபலமாக வாய்ப்புள்ளது. அதிலும் தன்னார்வம் கொண்டு செய்தல், சிறந்த பலனை தரும்.

3. சாத்தியக்கூறுகள் அமையுமாறு இருத்தல்: முக்கியமாக மனதிற்கு பிடித்த ஒன்றை செய்வதால், மனம் அதில் அதிக ஆர்வத்தைக் கொண்டு, அதில் ஒருவகையான ஒளியை தரும்.

எந்த நேரத்திலும் விரும்பும் ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை கவர நேரிடும். இதன் விளைவு, மற்றவர்களுடன் பழக வாய்ப்பை ஏற்படுத்தும்.

4. சிறிய முயற்சியும் கைகூடும்:
எந்த ஒரு செயலை செய்யும் போது தோல்வி வந்தாலும், அதைக் கண்டு மனதை தளர விடாமல், தொடர்ந்து முயற்சித்தால், ஒரு நாள் நிச்சயம் லட்சியத்தை அடைய முடியும்.

எனவே எந்த ஒரு சிறிய முயற்சியையும் கைவிடாமல், தொடர வேண்டும்.

5. வயதுக்கு தகுந்தாற்போல் நடந்துகொள்வது: ஒவ்வொரு வயதினரிடம் பேசும் போதும், அதற்கு தகுந்தாற்போல் அவருடன் கலந்து கொள்வதன் மூலம், நம் நட்பின் நெருக்கம் அதிகரிக்கும். இதற்கு வயது வரம்பு ஒன்றும் இல்லை. பொதுவாக மக்கள் பல்வேறு அம்சங்களால் ஈர்க்கப்படுகின்றனர். இதைப் பொறுத்து, நாம் எந்த மாதிரியான நெருக்கத்தை கொண்டுள்ளோம் என்பதை உணரலாம்.

6. தட்டி கொடுத்தல்:
உங்களை நீங்களே தட்டி கொடுத்து, செய்யும் வேலைகளை நீங்களே பாராட்டிக் கொள்வதால், மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். நெருக்கம் என்பது வெவ்வேறான மக்களுக்கு வெவ்வேறான விஷயங்களாகும். அது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருப்பது நல்லது. இதை புரிந்து நடந்து கொண்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். ஒவ்வொரு மனிதருடன் பழக பல வழிகள் உள்ளன. அதற்கு சமயமும் சந்தர்ப்பமும் அமைந்துவிட்டால் எல்லாம் உங்களுக்கு ஏற்றதாகவே நடக்கும்.

செயலில் அன்பிருக்கட்டும்



* தாயும், தந்தையும் எப்போது மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்போது கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், பெற்றோர் பெருமை கொள்ளும் விதத்தில் வாழுங்கள்.

* அறிவோடு ஒன்றிவிடும்போது தான் பிழைகளைப் போக்க முடியும். இந்த முடிவை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.

* தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.

* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.

* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப்போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு உண்டு. அதனால் வேண்டியதை ஏற்கவும், வேண்டாதவற்றை தள்ளவும் செய்யுங்கள்.

* கருணையே இனிமையான சொர்க்கம். மக்கள் அனைவரும் கருணை நிறைந்தவர்களாக மாறினால் பூமியே சொர்க்கமாகி விடும்.

* ஒன்றைப் பெற்றுக் கொள்பவனுக்குப் பெருமைஇல்லை. கொடுப்பவன் தான் பேறு பெற்றவனாகிறான்.

                                                       செயலில் அன்பிருக்கட்டும்!
                                                                                                                       
                                                                                        - விவேகானந்தர்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

நீங்களும் ஹீரோதான்




நான் நேற்று கண்ணா லட்டு திங்க ஆசையா படம் பார்த்தேன்.அதில் படத்தின் முடிவில்  சிம்பு கூறும் வசனம் நிதர்சனமான உண்மை. அது ''பிரச்சனைன்னு ஒன்று வருவதே நம்ம திறமையை நாம வெளிக்கொண்டு வருவதற்கு கடவுள் கொடுத்த கிஃப்ட். உன் பிரச்சனையை நீயே தீர்த்துக்கொண்டால் நீயும் ஹீரோதான்.''
           பல சமயங்களில் நமக்கு பிரச்சனை வரும் போது நம்முடைய அறிவு வேலை செய்வது இல்லை.எனவே நாம் பிறர் உதவியை நாடுகின்றோம்.அதுவும் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலோனோர் தண்ணியடித்துக்கொண்டேதான் பேசுகின்றோம் . அப்பொழுது நம் பிரச்சனையை கேட்பவரும் தண்ணியடித்திருப்பதால் அவருடைய அறிவும் வேலை செய்வதில்லை. எனவே பெரும்பாலான சமயங்களில் தவறான முடிவுகளையே எடுக்கிறோம். எனவேதான் பல குற்றச்செயல்கள் நடக்கின்றது.மேலும் குடியினால் நாம் நெகடிவான முடிவுகளையே எடுப்போம்.
     
            எனவே முடிந்தவரை பிரச்சனையின் போது குடித்துவிட்டு முடிவெடுப்பதை தவிர்ப்போம்.நல்ல முறையில் சிந்தித்து நம் பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு கண்டால் நாமும் ஹீரோதான்.

திங்கள், 21 ஜனவரி, 2013

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

ஒரு ஊரில் ஒரு பண்ணையார் பத்து கோழிகளும் பத்து ஆடுகளும் வளர்த்து வந்தார்.அவரது வீட்டில் எலி ஒன்றும் வசித்து வந்தது.அது அங்கிருந்த அரிசி மூட்டைகளை கடித்து அரிசியை சாப்பிட்டு வந்தது.இதனால் கோபமடைந்த பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வைத்தார்.இதனை பார்த்து விட்ட எலி நேராக கோழிகளிடம் சென்று தன்னை காப்பாற்றும்படி கேட்டது.ஆனால் கோழிகள் எலிப்பொறியால் தங்களுக்கு எதுவும் ஆபத்தில்லை என்றும் அதனால் அதைப்பற்றி தங்களுக்கு கவலையில்லை என்றும் கூறின. இதனை கேட்ட எலி நேராக ஆடுகளிடம் சென்று கூறியது.ஆடுகளும் அதையே கூறின.இதை கேட்ட எலி அழுது கொண்டே சென்று விட்டது.மேலும் அது பொறியில் மாட்டாமல் சுற்றி வந்தது.ஒரு நாள் இரவு ஒரு பாம்பு வந்தது.அதன்  வால் பொறியில் மாட்டி விட்டது.பாம்பு தப்பிக்க முயற்சி செய்த  போது சத்தம் வந்ததை கேட்ட பண்ணையாரின் மனைவி எலிதான் மாட்டிவிட்டது என நினைத்து பொறியின் அருகே சென்ற போது பாம்பு அவளை கடித்து விட்டது.விஷம் ஏறி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை பார்க்க உறவினர்கள் வந்து பத்து நாட்களுக்கு தினமும் ஒரு கோழியின் ஈரல் கொடுக்கும்படி கூறினர்.பண்ணையாரும் அதன்படி செய்தார்.இப்பொழுது கோழிகள் எலியிடம் நீ கூறிய அன்றே பொறியை எடுத்திருந்தால் இப்பொழுது சாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறி அழுதன.பத்து நாட்களுக்கு  பிறகு பண்ணையாரின் மனைவி இறந்து விட்டார்.அதன் பிறகு தன்னால் ஆடுகளை வளர்க்க முடியாது என்று கசாப்பு கடையில் விற்று விட்டார்.ஆடுகளும் எலியிடம் அழுதன.அதற்கு எலி நான் சொல்லியபோதே அந்த பொறியை எடுத்திருந்தால் உங்கள் யாருக்கும் இந்நிலை வந்திருக்காது கண் கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் பார்க்க முடியாது என்று கூறி சென்றது.




சொல்ல வந்த தகவல்:  இன்று ஒரு பதிவில் விவசாயிகளின் தற்கொலை பற்றி படித்தேன்.யாரோ எங்கோ உள்ள ஒரு விவசாயிக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று நாம் இருந்தால் விவசாய நிலங்கள் அனைத்தும் அப்பார்ட்மென்ட்களாக மாறும்.ஆனால் அரிசிக்கு வழியில்லாமல் அல்லலுறுவோம்.எனவே யோசிப்போம் நண்பர்களே இப்பொழுது நாம் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டால்  நம் பேரப்பிள்ளைகளுக்கு உணவிட முடியாத சூழல் வரும்.எனவே கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்போம்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

பயம் எனும் பேய்



ஒரு ஊரில் மாணிக்கம் என்ற ஒரு ஆடு வளர்ப்பவர் இருந்தார். அவருக்கு பாபு,கோபு என்ற இரு மகன்கள் இருந்தனர்.மாணிக்கத்திற்கு வயசாகி விட்டதால் அவர் தன்னிடமிருந்த ஆடுகள் அனைத்தையும் தனது மகன்கள் இருவருக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்து ஆடுகளை சரி பாதியாக பிரித்துக்கொடுத்தார். பாபு கோபு இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்களுடைய ஆடுகளை வளர்த்தனர். அந்த ஆடுகள் அனைத்திற்க்கும் தீவனம் போடும் பொறுப்பு அவர்களின் தந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து பார்த்த போது பாபுவின் ஆடுகள் அனைத்தும் நன்றாக குண்டாக இருந்தன. எனவே கோபுவிற்கு தன் தந்தை தன் ஆடுகளிற்கு சரியாக தீவனம் கொடுப்பதில்லை என சந்தேகம் வந்தது. எனவே இதைப்  பற்றி ஊர் தலைவரிடம் முறையிட்டான்.ஊர் தலைவர் நாம் இருவரும் உன் தந்தையின் நடவடிக்கைகளை ஒரு வாரம் கவனிப்போம் என்று கூறினார். கோபுவும் அதற்கு ஒத்துக்கொண்டான்.அதன்படி இருவரும் ஒரு வாரம் கவனித்தனர்.கோபுவின் தந்தை இருவரின் ஆடுகளுக்கும் சமமாகவே தீவனம் கொடுத்தார்.இருவரின் ஆடுகளும் நன்றாகவே சாப்பிட்டன. கோபுவிற்கும் ஊர் தலைவருக்கும் பின் எவ்வாறு  கோபுவின் ஆடுகள் மட்டும் இளைத்துப்போய் உள்ளன என்று ஒன்றும் புரியவில்லை. எனவே இதைப் பற்றி கோபுவின் தந்தையிடமே கேட்டனர்.ஆடுகள் வளர்ப்பதில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் தன் மகனிடம் உன் ஆட்டுப்பட்டிக்கு எதிரே கவனி என்றார்.எதிரே ஒரு கறி கடை இருந்தது.உன் ஆடுகள் என்னதான் சாப்பிட்டாலும் எதிரே உள்ள கடையில் ஆடுகள் வெட்டும்போது அவற்றின் மனதில் பயம் வந்து விடும். எனவே அந்த பயம் எனும் பேய் அவை சாப்பிடுவதை அவற்றின் உடம்பில் ஒட்டாமல் செய்து விடுகின்றது. எனவேதான் உன் ஆடுகள் அனைத்தும் ஒல்லியாக உள்ளன என்று கூறினார்.இதை கேட்ட கோபு தன் ஆடுகளை வேறு இடத்தில் நன்றாக வளர்த்தான்.


சொல்ல வந்த தகவல்:

     இந்த கதை ஆடுகளுக்கு மட்டும் அல்ல நமக்கும்தான். நம்மிடம் பயம் வந்துவிட்டால் உடல் நலமும்,மன நலமும் கெட்டுவிடும்.எனவே பயம் எனும் பேயை நம் மனதிலிருந்து விரட்டுவோம்.


பின் குறிப்பு: 
 
          இது என்னுடைய முதல் பதிவு தவறு ஏதேனும் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.